Saturday 18th of May 2024 02:27:47 AM GMT

LANGUAGE - TAMIL
-
13-ஐ முழுமையாக அமுல்செய்ய உதவுமாறு  இந்தியாவிடம் கூட்டாக கோர தமிழ் கட்சிகள் ஏற்பாடு!

13-ஐ முழுமையாக அமுல்செய்ய உதவுமாறு இந்தியாவிடம் கூட்டாக கோர தமிழ் கட்சிகள் ஏற்பாடு!


13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துமாறு தமிழ் தேசிய பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து இந்திய அரசாங்கத்திடம் கோருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் நவம்பர் -02 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய பரப்பில் செயலாற்றும் அனைத்து கட்சிகளையும் ஒன்றுகூட்டி இது குறித்துக் கலந்துரையாடுவதற்கு தீா்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று சனிக்கிழமை கட்சித்தலைவர்கள் கலந்து கொள்ளும் இணையவழியான கூட்டத்தில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஸ்ரீகாந்தா மற்றும் நீதியரசர் விக்னேஸ்வரன் சார்பிலே பேராசிரியர் சிவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு இது குறித்த முடிவை எடுத்துள்ளதாக ரெலோ ஊடகப் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE